அறவலர் வீடமைப்பு நிர்மாணம்
மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்குள் 2,558,716 சனத்தொகை வாழ்வதோடு, இது நாட்டிலேயே இரண்டாவது அதிக சனத்தொகை கொண்ட மாகாணமாகவும் காணப்படுகின்றது. வீடமைப்புத் திணைக்களத்தினால் மத்திய மாகாணத்தின் 41 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரச நிதியேற்பாடுகள் மூலம் வீடமைப்பு உதவிகளை வழங்குதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், மத்திய மாகாணத்தினுள் வீடமைப்பு அபிவிருத்தியானது இன்னும் குறிப்பிடத்தக்க மட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரியவில்லை.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக, நிதியியல் வசதி படைத்த, சமூக சேவையில் ஆர்வமுள்ள நன்கொடையாளர்களை இனங்கண்டு, அவர்களின் நிதியியல் / பொருள் / சரீரப் பங்களிப்புடன், தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடொன்றை நிர்மாணித்துக்கொள்வதற்குத் தேவையான உதவியை வழங்குவதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
தகைமைகள்
குறைந்த வருமானம் பெறும் குடும்ப அலகாக இருத்தல்.
நிரந்தர வீடொன்றின் உரிமை இல்லாத குடும்பமாக இருத்தல்.
குடும்பத்தில் விசேட தேவையுடைய / அங்கவீனமுற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பமாக இருத்தல்.
பிரிவில் நிரந்தரமாக வசிக்கும் குடும்ப அலகாக இருத்தல்.
குடும்பத் தலைவர் பெண்ணாக இருத்தல் அல்லது பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகளைக் கொண்ட விதவைப் பெண்ணாக இருத்தல் அல்லது பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பமாக இருத்தல்.
காணி உரிமையை விண்ணப்பதாரி கொண்டிருப்பதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுதிப்படுத்தலைச் சமர்ப்பிக்கும் இயலுமையை விண்ணப்பதாரி கொண்டிருத்தல்.
அஸ்வெசும / சமுர்த்தி / முதியோர் கொடுப்பனவு போன்ற பொதுசன உதவிகளைப் பெறுபவராக இருத்தல்.











